உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

முப்பாட்டன் முண்டாசுக்காரனுக்கு!'தனியொரு மனிதனுக்குஉணவில்லையெனில்ஜகத்தினை அழித்திடுவோம்'என்று மிரட்டினாய்அரசு பயந்து அமைத்ததுஅம்மா உணவகம்!'ஓடி விளையாடு பாப்பா' என்றாய்ஓயாமல் விளையாடுகிறோம்வீடியோ கேம்!'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்றாய்ஜாதிகள் இல்லாமல் போகவே செய்கிறோம்கவுரவக் கொலைகளால்!'ஆடுவோமேபள்ளு பாடுவோமேஆனந்த சுதந்திரம்அடைந்து விட்டோமென்று'என்றாய்ஆட்டமாய் ஆடிபாடாய் படுத்துகின்றனர்ஆட்சி, அதிகாரத்திலிருப்பவர்கள்!'மனதில் உறுதி வேண்டும்' என்றாய்நான்கு குவார்ட்டர் அடித்தாலும்தள்ளாடாமல் நிற்பதற்கு தான்டாஸ்மாக்கில் பயிற்சி எடுக்கிறோம்!'காணி நிலம் வேண்டும்' என்றுஆசை படச் சொன்னாய்...புறம்போக்கு நிலங்களையும்வளைத்து விட்டோம்!'சிங்களத் தீவினுக்கோர்பாலம் அமைப்போம்'என்றதை செய்து பார்த்துசேது சமுத்திரத் திட்டத்தில்பைசா பார்த்து விட்டோம்!'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்றுபாடத் தான் முடிகிறதுபாலியல் வன்முறைகளைப் பார்த்து!'சொல்லடி சிவசக்தி...எனை சுடர் விடும்அறிவுடன்ஏன் படைத்தாய்' என்றுஉன்னோடு சேர்ந்துபாடி அழத் தான் முடிகிறதுவேறு வழியற்று!— அ. யாழினி பர்வதம்,சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !