உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நிரந்தர முதல்வர் சித்து கோஷத்தால் பரபரப்பு

 நிரந்தர முதல்வர் சித்து கோஷத்தால் பரபரப்பு

மைசூரு: மைசூரு நகரில் கட்டப்பட்டு வரும் காங்கிரஸ் பவனை முன்னாள் முதல்வர் சித்தராமையா பார்வையிட வந்தபோது, 'நிரந்தர முதல்வர்' என்ற கோஷத்தால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மைசூரு நகரில் நேற்று முன்தினம் புதிய வீடு கட்டி கிரஹப்பிரவேசம் நடத்தினார். மைசூரு நகர ரயில் நிலையம் அருகில் புதிதாக காங்கிரஸ் பவன் கட்டப்பட்டு வருகிறது. இதை சித்தராமையா, அவரது ஆதரவாளர் எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட் ஆகியோர் நேற்று காலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது ஆதரவாளரும், மைசூரு மாவட்ட காங்., முன்னாள் தலைவருமான விஜயகுமார், '2028லும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சித்தராமையாவே முதல்வராக இருப்பார். மாநிலத்தின் நிரந்தர முதல்வர்' என்று கோஷம் எழுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை