உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சென்னையில் அடிடாஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்

சென்னையில் அடிடாஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்

சென்னை:உலகின் மிகப்பெரிய விளையாட்டு காலணிகள் மற்றும் ஆடைகள் பிராண்டான ஜெர்மனியின் 'அடிடாஸ்', சீனாவுக்கு அடுத்ததாக, அதன் முதல் ஆசிய உலகளாவிய திறன் மையத்தை, தமிழகத்தில் அமைக்க முடிவு செய்துஉள்ளது. சென்னையில் அமையவுள்ள இந்த மையத்தில், பெருமளவு வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும்; அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் பெரிய மதிப்பு வளங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், அடிடாஸ் தெரிவித்துஉள்ளது. இது குறித்து தொழில்துறை அமைச்சர் ராஜா கூறியதாவது:நீண்டகாலமாகவே சிறந்த தகவல் மையமாகவும், தொழில்துறை சக்தியாகவும் தமிழகம் விளங்கி வருகிறது. திறன்களை நிரூபிப்பதிலும்; முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.நம் மாநிலத்தில், கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் பணிபுரியும் காலணித் துறையில் இந்த முன்னேற்றம் நன்றாகத் தெரிகிறது. இதனால் பெரிய காலணி உற்பத்தியாளர்கள், தங்கள் உலகளாவிய திறன் மைய செயல்பாடுகளுக்கு, சென்னையை சிறந்த இடமாக பார்க்கின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 05, 2024 10:35

எல்லாமே சென்னையில்தானா? இப்படியே எல்லா தொழில்களையும் சென்னைக்கே கொண்டு வந்து மற்ற மாவட்ட மக்கள் வாழ முடியாமல் செய்கிறீர்கள். அதிகாரமும் வளமும் ஒரே இடத்தில குவிவது ஆபத்தானது. மற்றவர்களுக்கு மட்டுமல்ல சென்னையில் இருப்பவர்களுக்கே ஆபத்தானது. இதை ஏன் இந்த திருட்டு திராவிடம் புரிந்து கொள்வதில்லை என்று தெரியவில்லை. அது சரி தத்திகளையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்தால் மக்கள் அனுபவிக்க வேண்டியதுதான்.


Rajarajan
ஜன 05, 2024 07:12

இந்த தொழிற்சாலையை, தமிழக தென்மாவட்டத்தில் ஏன் நிறுவ கூடாது ? அங்கு வேலைவாய்ப்பு பெருகும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை