பிரதான பட்டியலுக்கு மாறுவதற்கு எஸ்.எம்.இ.,களுக்கு புது விதிகள் தேசிய பங்கு சந்தை அறிவிப்பு
புதுடில்லி:தேசிய பங்குச் சந்தையின் எஸ்.எம்.இ., தளத்தில் பட்டியலிடப்படுள்ள நிறுவனங்கள், பிரதான பட்டியலுக்கு மாறுவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.அதன் விபரங்கள் பின்வருமாறு:1மூலதனம்: விண்ணப்பிக்கும் எஸ்.எம்.இ., நிறுவனங்களின் பங்குதாரர்கள் செலுத்திய மூலதனமான 'பெயிடு அப் கேப்பிடல்', குறைந்தபட்சம் 10 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். பட்டியலிடப்படும்போது, நிறுவனத்தின் மூலதனம் 100 கோடி ரூபாய்க்கு குறைவாக இருக்கக்கூடாது.2வருவாய்: முந்தைய நிதியாண்டில், 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியிருக்க வேண்டும். மேலும், முந்தைய மூன்று நிதியாண்டுகளில் குறைந்தபட்சம் இரண்டில், நேர்மறையான செயல்பாட்டு லாபம் ஈட்டியிருக்க வேண்டும்.3பட்டியலிடும் காலம்: தேசிய பங்குச் சந்தையின் எஸ்.எம்.இ., தளத்தில், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்.4பொது பங்குதாரர்கள்: பிரதான சந்தையில் பட்டியலிட விண்ணப்பம் தாக்கல் செய்யும் போது, எஸ்.எம்.இ., நிறுவனத்துக்கு குறைந்தபட்சம் 500 பொது பங்குதாரர்களாவது இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை முன்பு 1,000 ஆக இருந்தது.5நிறுவனர் மற்றும் நிறுவனர் குழுமம்: விண்ணப்பத்தின் போது, எஸ்.எம்.இ., நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிறுவனர் குழுமம் இந்நிறுவனத்தில் குறைந்தபட்சம் 20 சதவீத பங்குகளை வைத்திருக்க வேண்டும். மேலும், பிரதான சந்தையில் பட்டியலிடப்படும் போது, இவர்களின் பங்கு விண்ணப்பத்தின் போது இருந்ததில், குறைந்தபட்சம் 50 சதவீதமாவது இருக்க வேண்டும்.
பிற நிபந்தனைகள்
விண்ணப்பிக்கும் நிறுவனத்துக்கு எதிராக திவால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கக் கூடாது நிறுவனத்தின் நிகர மதிப்பு, குறைந்தபட்சம் 75 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் முந்தைய 3 ஆண்டு களில் நிறுவனம், நிறுவனர்களுக்கு எதிராக, பங்குச் சந்தையால் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருக்க கூடாது விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் மீது, முதலீட்டாளர் புகார் தளத்தில், எந்த புகார்களும் நிலுவையில் இருக்கக்கூடாது பங்குதாரர்களுக்கு வட்டி அல்லது மூலதனம் தொடர்பாக எந்த நிலுவையும் வைத்துஇருக்கக் கூடாது.