உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம்

நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம்

பெங்களூரு: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கர்நாடகாவில் கடைசியாக, கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. விதிமுறைப்படி ஆறு மாதங்களுக்குள் அடுத்த கூட்டத்தொடர் நடத்த வேண்டும். அதன்படி, கர்நாடக மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் ஜூலை 15ம் தேதி துவங்கியது. இன்று(ஜூலை 25) கூட்டத்தொடர் துவங்கியதும், முதலில், சட்டசபை, லோக்சபா தொகுதிகள் மறுவரையறை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தலை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யவும், நீட் தேர்வில் கர்நாடகாவுக்கு விலக்கு அளிக்க கோரியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சமீபத்தில், நீட் தேர்வு விலக்கு கோரி, தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Jay
ஜூலை 25, 2024 20:59

என்ன ஒரு‌ முரண்பாடு? இந்த தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ்+ திம்க தான். இப்பவும் காங்கிரஸ் தலைமை நீட் தேர்வு வேண்டாம் என்று கூறவே இல்லை. தலைமை அரசியல் செய்யும்போது கூட ஊழல் நடந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்களே தவிர தேர்வு வேண்டாம் என்று சொல்லவே இல்லை. எப்படி மக்களை முட்டாளாக்குகிறார்கள், மத்தியில் ஒரு நிலை மாநிலத்தில் ஒரு நிலை.


karthic
ஜூலை 25, 2024 16:56

இந்தியா முன்னேற்றத்தின் தடுப்பு ஆணை இந்த பிரிவினருக்கு கொடுக்கும் விலக்குகள் .


nagendhiran
ஜூலை 25, 2024 16:23

கெடுக்கும் கதைதான்?


Rengaraj
ஜூலை 25, 2024 16:07

எதுக்கு இந்த மாதிரி தீர்மானம் எல்லாம் ? காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்தி கூட்டணி ஒன்றாக சேர்ந்து ஒரே வழக்காக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக போடலாமே வழக்கு தொடுக்க பயமா ?? வழக்கு என்று போய்விட்டால் காங்கிரஸின் மற்றும் கூட்டணி கட்சியான திமுகவின் மானம் கப்பலேறிவிடும். இப்போவே பாதி போயாச்சு


venugopal s
ஜூலை 25, 2024 15:31

இது ஆரம்பம் தான், மத்தியில் பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வருவதற்கு முன் இன்னும் எத்தனை மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக கிளம்பி வரப் போகின்றனர் என்று பார்க்கத் தானே போகிறோம்!


Dr Raja T
ஜூலை 25, 2024 14:58

நீட் தேர்வு என்று ஒரு தேசிய அளவில் இல்லாவிட்டால் அனைத்து மாணவர்களும் குறைந்த பட்சம் 5 முதல் 9 தேர்வு வரை எழுத வேண்டும். +2 மதிப்பெண் என்றால் மறு தேர்வுக்கு வாய்ப்பு இல்லை.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 25, 2024 14:03

ஆக ஆக ஆக ஆக காவிரிநீர் பற்றி தமிழ்நாடு இனிமே பேசப்படாது .....


Apposthalan samlin
ஜூலை 25, 2024 13:31

upsc அடுத்த முறைகேடு கிளம்பும்


அஜய் சென்னை இந்தியன்
ஜூலை 25, 2024 13:26

NEET தேர்வு என்பது மாணவர்களுக்கு தேவை. ஆனால் அரசியல் வாதிகளுக்கு தேவை இல்லை. காரணம் அரசியல்வாதி பிள்ளைகள், அரசு ஊழியர் பிள்ளை எல்வளவு லட்சம், கோடி கொடுத்தாவது MBBS medical seats வாங்கி விட முடியும் NEET என்ற exam இல்லை என்றால். ஆனால் உண்மையான திறமை வாய்ந்த மாணவர்கள் NEET இல்லை என்றால் MBBS என்பது கனவு காணும் விசயமாக மாறிவிடும். நீட் தேர்வு எழுதும் அளவில் கல்வி தரத்தை உயர்த்துங்கள். அல்லது MBBS படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இலவச NEET தேர்வுக்கான பயிற்சி கொடுங்கள்.


Swaminathan L
ஜூலை 25, 2024 13:16

தொகுதி வரையறை செய்வது ஏற்கனவே காலதாமதம் ஆன ஒன்று. அது முடிந்ததும் சென்சஸ் எடுத்து அதற்குப் பிறகு இட ஒதுக்கீடு விகிதங்கள் சரிவர மாற்றப்பட வேண்டும். மகளிருக்கான 33 சதவிகிதம் பாராளுமன்ற இருக்கைகள் இதற்குப் பிறகே சாத்தியமாகும். நீட் தேர்வு விலக்கு கேட்டு தாராளமாக தீர்மானம் போடலாம். அது சம்பிரதாயத்துக்காகச் செய்யப்படும் அரசியல் நடவடிக்கை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை