உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யு.சி.ஜி. நெட் தேர்வு ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

யு.சி.ஜி. நெட் தேர்வு ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி: முறைகேடு புகார் எதிரொலியாக ‛நெட்' தேர்வை திடீரென ரத்து செய்து மத்திய அரசு இன்று (19-ம் தேதி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நாட்டின் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்க, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை சார்பில், யு.ஜி.சி., நெட் தேர்வு நடத்தப்படுகிறது. ‛நெட்' -2024 தேர்வுகள் நாடு முழுதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தேசிய சைபர் குற்றப்பிரிவிலிருந்து யு.ஜி.சி.க்கு தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‛நெட்' 2024 தேர்வு ரத்து செய்யப்படுகிறது. புதிய தேர்வு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு செயல்முறையின் வெளிப்படைத்தன்மை, புனித் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் 2024 நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே ‛நெட' தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venugopal s
ஜூன் 20, 2024 12:53

அதேபோல் நீட் தேர்வையும் ரத்து செய்து விட்டு புதிதாக நடத்தப்பட வேண்டும்!


S BASKAR
ஜூன் 20, 2024 09:22

முதலில் mla mp யா போட்டி போடுறவங்களுக்கு ஒரு தகுதி தேர்வை வைங்கப்பா. மேலும் கல்வி தகுதியையும் நிர்ணயம் செய்யுங்கள்.இப்போல்லாம் பியூன் வேலைக்கே கல்வி தகுதி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை