உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "7 நாட்களில் சி.ஏ.ஏ., சட்டம் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் பேச்சு

"7 நாட்களில் சி.ஏ.ஏ., சட்டம் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசினார். மேற்கு வங்கத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சாந்தனு தாக்கூர் பேசுகையில், ‛‛ இந்த மேடையில் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். இன்னும் 7 நாட்களுக்குள் மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சி.ஏ.ஏ., சட்டம் அமல்படுத்தப்படும்'' எனக் குறிப்பிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fgth2nxx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு,‛‛லோக்சபா தேர்தலுக்கு முன் மக்களை பயமுறுத்துவதற்காக சி.ஏ.ஏ., சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது என நிருபர்கள் சந்திப்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தயவுசெய்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் டில்லியில் உள்ள மத்திய அரசு வெளியேற்ற மாட்டார்கள் என மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sathyasekaren Sathyanarayanana
ஜன 30, 2024 00:06

ஒரு மாநில முதல்வருக்கே CAA சட்டம் யாருக்கானது என்று தெரியவில்லை. ரொஹிங்கியாக்களுக்கு , வங்கதேச முஸ்லிம்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்க எந்த சட்டத்திலும் முடியாது.


வெகுளி
ஜன 29, 2024 23:44

கள்ளக்குடியேறிகள் வெளியேற்றப்படுவது நாட்டுக்கு நல்லது... இதை சுயலாப அரசியலுக்காக யாரும் எதிர்க்க கூடாது....


Palanisamy Sekar
ஜன 29, 2024 19:29

புதிதாக இவரை சேர்த்தாலும் அவர்களை களையெடுக்க வேண்டும். மம்தா கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேலாக பங்களாதேஷ் மக்களை அந்த மாநிலத்திற்கும் ஏற்கனவே கொண்டுவந்துவிட்டார். இன்னும் அவர் சேர்க்க நினைத்தால் அதனை தடுக்கும் திறனை மத்திய அரசு கடுமையாக கையாள வேண்டும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட நபர்களை உள்ளூர் மக்களை கொண்டு கணக்கெடுத்து அவர்கள் நாட்டுக்கே திரும்ப அனுப்ப வேண்டும். இல்லையேல் நாடு சுடுகாடாகிவிடும்./


Duruvesan
ஜன 29, 2024 18:34

Mamata வுக்கு பயம். CAA வந்தா மொத்த ஓட்டு போய்விடும் இவ்வளவு நாள் அவனுங்க வாக்காளர் பட்டியல் ல இல்லை அப்படின்னா யாரு கள்ள ஓட்டு போடும் மக்களா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை