உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழிவாங்கும் முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பழிவாங்கும் முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்று அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கான பழிவாங்கும் முயற்சியாகும் என ஆம்ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.இது குறித்து டில்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி கூறியதாவது: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மேலும் ஒரு முறைகேடான சம்மன் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறையின் ஒவ்வொரு சம்மன் மீதும் சட்ட ரீதியான கேள்விகளை எழுப்பி உள்ளோம். ஆம் ஆத்மியை பா.ஜ., அச்சுறுத்தி வருகிறது. கெஜ்ரிவாலுக்கு இன்று அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கான பழிவாங்கும் முயற்சியாகும். நீதிமன்றத்தின் உத்தரவுக்காக அமலாக்கத்துறையால் ஏன் காத்திருக்க முடியவில்லை. அமலாக்கத்துறை சம்மன்களைக் கண்டு ஆம் ஆத்மி கட்சியும் கெஜ்ரிவாலும் பயப்படப் போவதில்லை. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க பா.ஜ.,வுக்கு எதிரான போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sridhar
பிப் 23, 2024 12:50

இப்போது கொடுத்த சம்மன் மேயர் தேர்தலுக்கு பழிவாங்கும் செயல் னா இதுக்கு முன்னாடி கொடுத்த சம்மன்கள் எல்லாம் எதுக்கு? சட்டப்படி செல்லதுன்னா கோர்ட்டுக்கு போயிருக்கணும். இப்போ அவங்க கோர்ட்டுக்கு போனபிறகும், கோர்ட்டுக்கும் வராம டிமிக்கி கொடுக்கறாரு இந்த ஆளு. மிகவும் தவறான உதாரணத்த வரும் தலைமுறையினருக்கு தெரிவிக்கறாரு. சம்மனுக்கு ஆஜராகாததே ஒரு தனி குற்றம். இப்போ அதுக்கும் சேர்த்து இருக்கு ஆப்பு அரசு பதவியில் இருக்கற ஆளே சட்டத்த மதிக்கலேன்னா, நாடு எதை நோக்கி நகரும்? அவங்க ஒன்னும் குற்றவாளின்னு சொல்லலியே? விசாரணைக்கே வரமாட்டேங்கறது எந்த விதத்துல நியாயம்? அரெஸ்டுக்கு அவ்வளவு பயம் இருந்திருந்தா, ஊழல் பண்ணியிருக்கக்கூடாது. இன்னைக்கு இல்லேன்னாலும் எப்படியும் அடுத்த மாசம் கோர்ட்டு உத்தரவு போடப்போகுது, அப்போ கம்பி என்னதான் போறீங்க. தேர்தல் பிரச்சார சமயத்துல உள்ளே போயி மாட்டிக்காம இப்போவே விசாரணையை எதிர்கொண்டா சீக்கிரம் வெளியே வர வாய்ப்புகள் இருக்கும் இல்ல? பாவம் ரொம்பவே பயந்து போயிருக்காங்க இந்த விவகாரம் வெளிவராதுன்னு எப்படி நினைச்சாங்க? இப்போதான் எல்லா ஊழல் பேர்வழிகளும் சிறைக்கு சென்று நாடு சுத்தமாகுமோ


vadivelu
பிப் 23, 2024 06:43

இது ஒரு வசதி யாகிவிட்டது .என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம் , கேள்வி கேட்டால் பழி வாங்குதல் என்று சொல்லி தப்பிக்கலாம் .ஆட்டை போடுபவர்கள் எல்லோருக்கும் இது ஒரு நல்ல காலம்.ஆயிரம் அரசியல் தலைவர்கள் இருக்கையில் ஒரு சிலர் மீதுதான் இந்த ரைடு வருது.பிறகு எப்படி இது பழி வாங்குதல் என்று ஆகும்.என்ன துணிவில் ஊழல் செய்தீர்கள்.


Sriram V
பிப் 23, 2024 04:15

This is George soros backed party


தாமரை மலர்கிறது
பிப் 23, 2024 02:10

காங்கிரஸ் செய்யாததையா பிஜேபி செய்கிறது. ரைடு விடுவதில் காங்கிரஸ் பழம் தின்று கொட்டை போட்டுள்ளது.


Rajasekar Jayaraman
பிப் 22, 2024 23:28

எப்ப நான் எங்கள திமுக கட்சியில் சேர்ந்தீர்கள் அவனுங்க மாறியே பேசுறீங்க போற போக்கு பார்த்தா உங்கள பாத்து அவனுக கத்துக்கணும் போல இந்த அளவுக்கு கோயபல்ஸ் வேலை கத்துக்கிட்டானுங்க.


M Ramachandran
பிப் 22, 2024 21:20

மத்திய அரசு நிர்பந்தகளுக்கு பாடியகூடாது . இந்த கும்பல் பஞ்சாபில் இந்த தர்ணாவை செய்ய்யட்டும் தைரியம் இருக்கா? தூண்டி விடும் டில்லி வாலா அங்கு எலி வலையில் பதுஙகி பூமிக்கடியில் தோண்டி கொண்டிருக்கு. வெளியில் வந்தால் பூனை யோ அல்லது பருந்தோ கவ்வி சென்று விடும். ஆனால் பூணையிடம் அக்ரீமெண்ட் பருந்திடம் முடியாதெ.


A1Suresh
பிப் 22, 2024 19:50

மஹாபாரதத்தில் சிகண்டி போல இந்த கேஸ் இழுத்துக்கொண்டே செல்கிறது


ராஜா
பிப் 22, 2024 18:55

கேஜ்ரி தவறு எதுவும் செய்யவில்லை என்றால் நீதிமன்றம் சென்று ED சம்மனுக்கு தடை கேட்க வேண்டியது தானே!? இல்லை வரும் சம்மனை நிராகரித்து விட்டு வருவதை எதிர்கொள்ள வேண்டியது தானே. இரண்டையும் விட்டுவிட்டு மாற்றி மாற்றி பதிரிக்கைகளிடம் வருவது நாடகமாக தெரிகிறது.


பேசும் தமிழன்
பிப் 22, 2024 18:51

அப்போ இதற்க்கு முன்பு கொடுத்த சம்மனுக்கு...... என்ன கணக்கு சொல்ல போகிறீர்கள் ??? மடியில் கணம் இல்லையென்றால் என்ன பயம்... போய் விசாரணையை எதிர்கொள்ள என்ன தயக்கம் ???


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை