மேலும் செய்திகள்
உடுப்பி கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடி வழிபாடு
3 hour(s) ago | 3
சபரிமலையில் இனி மதியம் அறுசுவை விருந்து
6 hour(s) ago
ரூ.40 கோடி போலி மருந்து பறிமுதல்; புதுச்சேரியில் அதிர்ச்சி
9 hour(s) ago | 6
புதுடில்லி: '' பல்வேறு திட்டங்களுக்கும் பகவத் கீதை தான் அடிப்படை '' என உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் மடத்தில் வழிபாடு நடத்திய பிறகு பிரதமர் மோடி கூறினார்.வழிகாட்டி
தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:புதிய மாதிரி
இந்த நகருக்கு வருவது மற்றொரு காரணத்தினால் எனக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. ஜன சங்கத்திற்கும், பாஜவின் சிறந்த நிர்வாக மாதிரிக்கும் உடுப்பி நகரமானது கர்மபூமியாக திகழ்கிறது. 1968 ம் ஆண்டில் ஜன சங்கத்தின் தலைவர் விஎஸ் ஆச்சார்யாவை, நகராட்சி கவுன்சில் உறுப்பினராக உடுப்பி மக்கள் தேர்வு செய்தனர். அதன் மூலம் நிர்வாகத்துக்கான புதிய மாதிரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு உடுப்பி மக்களின் பங்களிப்பை ஒட்டு மொத்த நாட்டு மக்களும் அறிவார்கள். அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்று நிகழ்வை ஸ்ரீவிஸ்வேசே தீர்த்த சுவாமிகள் வழிநடத்தினார்.சுதர்சன சக்கர இயக்கம்
செங்கோட்டையில் இருந்து சுதர்சன சக்கர இயக்கத்தை அறிவித்தேன். இந்த திட்டம் என்பது பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய இடங்களை சுற்றி, எதிரிகளின் தாக்குதலில் இருந்து காக்கும் பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதாகும்.எதிரிகள் அத்துமீறலில் ஈடுபட்டால் ஒரு எதிரி ஆக்கிரமிப்பைக் காட்டத் துணிந்தால் நமது சுதர்சன சக்கரம் அதை அழித்துவிடும்.ஆப்பரேஷன் சிந்தூர் நடந்த போது, நமது உறுதிப்பாட்டை தேசம் பார்த்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த சகோதரர் மற்றும் சகோதரிகள் பாதிக்கப்பட்டனர். பயங்கரவாத தாக்குதலின் போது முந்தைய அரசுகள் சோம்பேறித்தனமாக அமர்ந்திருந்தன. புதிய இந்தியா தனது மக்களைப் பாதுகாக்க தலைவணங்கவோ தயங்கவோ இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, உடுப்பி டவுனில் உள்ள நாராயணகுரு சதுக்கத்தில் இருந்து கல்சங்கா சந்திப்பு வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் நின்று பிரதமருக்கு, மக்கள், கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
3 hour(s) ago | 3
6 hour(s) ago
9 hour(s) ago | 6