உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிக்கு காரில் நாயுடன் வந்த காங்., பெண் எம்.பி; எழுந்தது சர்ச்சை

பார்லிக்கு காரில் நாயுடன் வந்த காங்., பெண் எம்.பி; எழுந்தது சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிக்கு காங்கிரஸ் பெண் எம்.பி. ஒருவர் தனது காரில் நாயுடன் வந்த சம்பவம் கடும் கண்டனங்களுக்கு வித்திட்டுள்ளது.பார்லிமெண்ட் குளிர்கால கூட்டத்தொடர் அறிவித்தப்படி இன்று (டிச.1) தொடங்கியது. கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களும் வந்து கொண்டிருந்தனர். அப்போது, காங்கிரஸ் பெண் எம்.பி., ரேணுகா சவுத்ரி தமது காரில் பார்லிமெண்ட்டுக்கு வந்தார். அவர் தமது காரில் நாய் ஒன்றையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். கடுமையான பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட்டு வரும் பார்லி.யில் எம்.பி., ஒருவர் நாயுடன் வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.இதுகுறித்து ரேணுகா சவுத்ரி கூறியதாவது; நான் போய் கொண்டு இருந்தேன். ஒரு ஸ்கூட்டர் மீது ஒரு கார் மோதியது. அப்போது இந்த சின்ன நாய்க்குட்டி ரோட்டில் அலைந்து கொண்டே இருந்தது.விபத்தில் அந்த நாய் சிக்கிக் கொண்டுவிடுமோ என்று நினைத்தேன். அதனால் நான் அதை எடுத்து, காரில் போட்டுக் கொண்டு பார்லிமெண்ட்டுக்கு வந்துவிட்டேன். இப்போது கார் போய்விட்டது, காருடன் அந்த நாயும் போய்விட்டது. எனவே, இப்போது இதை பற்றி விவாதிப்பதில் என்ன பயன்? கடிப்பவர்கள் உண்மையில் பார்லிமெண்ட் உள்ளே உட்கார்ந்து இருக்கின்றனர். நாங்கள் ஒரு விலங்கை பாதுகாக்கிறோம், ஆனால் இது பெரிய பிரச்னையாகவும், விவாத பொருளாகவும் மாறிவிட்டதுஅரசாங்கத்துக்கு செய்ய வேற எதுவுமே இல்லையா? நாயை வீட்டுக்கு அனுப்பி, அதை வீட்டிலேயே வைத்திருக்க சொல்லி இருக்கிறேன்.இவ்வாறு ரேணுகா சவுத்ரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை