உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உணவையும், மருந்தையும் கெஜ்ரிவால் வேண்டுமென்றே தவிர்க்கிறார்: கவர்னர் குற்றச்சாட்டு

உணவையும், மருந்தையும் கெஜ்ரிவால் வேண்டுமென்றே தவிர்க்கிறார்: கவர்னர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி திஹார் சிறையில் உள்ள டில்லி முதல்வர் கெஜ்ரிவால், டாக்டர்கள் பரிந்துரைத்த உணவையும், மருந்தையும் வேண்டுமென்றே தவிர்த்து வருகிறார்'' என டில்லி ஆளுநர் விகே சக்சேனா குற்றம்சாட்டி உள்ளார்.கெஜ்ரிவால் உடல்நிலை தொடர்பாக திஹார் சிறை கண்காணிப்பாளர் அறிக்கை அடிப்படையில், டில்லி அரசின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு, விகே சக்சேனா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கெஜ்ரிவால் வேண்டுமென்றே பரிந்துரைக்கப்பட்ட உணவு, இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளை தவிர்த்து வருகிறார். வீட்டில் இருந்து அனுப்பப்படும் உணவுகளை எடுத்து கொள்ள அனுமதிக்கப்பட்ட போதும், கலோரி குறைந்த உணவுகளை வேண்டுமென்றே எடுத்து கொள்கிறார்.கண்காணிப்பாளர் அனுப்பிய அறிக்கையின்படி கெஜ்ரிவாலின் உடல் எடை குறைந்துள்ளது. இதற்கு, கலோரி குறைந்த உணவை எடுத்துக் கொண்டதே முக்கிய காரணம். இவ்வாறு அந்த கடிதத்தில் சக்சேனா கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி பதிலடி

சக்சேனா கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டில்லி அமைச்சர் அதிஷி கூறுகையில், கெஜ்ரிவால் உடலில் ரத்த அளவு 50க்கும் கீழ் 8 முறை குறைந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் அவர் கோமாவுக்கும், பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்றார்.ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: என்ன மாதிரியான நகைச்சுவையை கவர்னர் கூறியுள்ளார். ஒருவர் தனது சர்க்கரை அளவை அபாய அளவுக்கு குறைப்பாரா? நோயை பற்றி தெரிந்து கொள்ளாமல் கவர்னர் கடிதம் எழுதக்கூடாது. இது போன்ற சூழ்நிலை உங்களுக்கும் வரலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R.Varadarajan
ஜூலை 21, 2024 01:30

விதி வலியது


NAGARAJAN
ஜூலை 20, 2024 21:05

இந்த பாஜக கவர்னர்களின் அராஜக போக்கு கண்டிக்கப்பட வேண்டும். .


Swaminathan L
ஜூலை 20, 2024 18:35

கெஜ்ரிவாலுக்கு வரும் உணவு, மருந்து, அவற்றை அவர் உட்கொள்வது அல்லது மறுப்பது எல்லாவற்றையும் வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது சிசிடிவி மூலம் ரெகார்ட் செய்து நீதிபதியிடம் காட்ட வேண்டும். எட்டு முறைக்கு மேல் இரத்தத்தில் சர்க்கரை அளவு ஐம்பதுக்கும் கீழே குறைந்தது என்று ஆருஷிக்கு எப்படித் தெரியும் என்பதையும் விசாரிக்க வேண்டும். கட்சி பெயர் தான் ஆம் ஆத்மி. இவர்கள் பலே ஆத்மி.


Anand
ஜூலை 20, 2024 15:30

ஊழல் செய்தவருக்கு என்ன ராஜ உபசாரம் வேண்டி கிடக்கு? சாப்பிடவில்லை என்றால் விடுங்கள்.


A Viswanathan
ஜூலை 20, 2024 16:27

கேஜ்ரிவாலுக்கு இந்த சித்து விளையாட்டெல்லாம் கைவந்த கலை.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை