உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கும்மிடிப்பூண்டியில் விரைவில் அமைகிறது ரயில் சக்கர ஆலை: அமைச்சர் வைஷ்ணவ்

கும்மிடிப்பூண்டியில் விரைவில் அமைகிறது ரயில் சக்கர ஆலை: அமைச்சர் வைஷ்ணவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:''திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ஆண்டுக்கு, 2.50 லட்சம் 'வந்தே பாரத்' ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்,'' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். சென்னை, தரமணியில், நேற்று, அவர் அளித்த பேட்டி:வந்தே பாரத் ரயில் வெற்றிகரமானது. இதைத் தொடர்ந்து அதன் சக்கரங்களை, உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, கும்மிடிப்பூண்டியில் ஆண்டுக்கு, 2.50 லட்சம் வந்தே பாரத் ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் திறனில், தொழிற்சாலை அமைக்கப்படும். அதில், 80,000 உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படும்; மீதி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.இதன் வாயிலாக, ரயில் சக்கரத்தை இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படும். ஆலை கட்டுமான பணியை விரைவில் துவக்கி, 16 - 18 மாதங்களுக்குள் உற்பத்தி துவக்கப்படும். சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில், 'ஸ்டாண்டர்டு கேஜ்' வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்பை இன்று துவக்குகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தகவல் தொடர்பு சாதனங்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. சில நாடுகள் மட்டுமே செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அதை நம் நாட்டில் உற்பத்தி செய்ய பிரதமர் மோடி, மூன்று செமி கண்டக்டர் ஆலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். செமிகண்டக்டர் துறைக்கு வலுவான அடித்தளம் போடப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டு களில் முழு வடிவம் பெறும். இதனால் நாட்டில் உள்ள மொபைல் போன், கம்ப்யூட்டர், விண்வெளி, மோட்டார் வாகனம் என, அனைத்து தொழில் துறைகளும் பயன்பெறும்.இந்தியா, '5ஜி' தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுடன் சமமான நிலையில் உள்ளது. '6ஜி' தொழில்நுட்பத்தில் உலகை வழிநடத்தும்.செமிகண்டக்டர் உற்பத்திக்கு எந்த மாநிலம் அனுமதி கேட்டாலும், உடனே அனுமதி வழங்கப்படும். தற்போது, எட்டு மாநிலங்கள் முன்வந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

V Gopalan
மார் 15, 2024 16:20

Instead of go on giving false promise, let him concentrate on the trains running from Bengaluru to Madurai, then how many trains are diverted to Kerala, why that the Palakkad division is getting more and more importance, why not shift all the Keralites from the Headquarters of Southern Railway. From every nook and corner of the country is connected to Kerala whereas from Bengaluru/Mysore there is only one Mysore Tuticorin express, is it possible every one to travel in Vande Bharat express at an exhorbitant fares. BJP govt only drum beating but not going through the ground reality. Let the President of BJP of Tamilnadu Shri Annamalai to look into the facilities of Kerala and Tamilnadu. Trains are being diverted to Kerala without touching Coimbatore, will it be known to Shri Annamalai or just go on blabbering?


venugopal s
மார் 15, 2024 15:49

இங்கே ஆரம்பித்தாலும் எப்படியும் வட இந்தியர்களைத் தான் எல்லா வேலைகளிலும் அமர்த்தப் போகிறீர்கள், அதற்கு ஏன் இந்த தொழிற்சாலையையே வட இந்தியாவில் அமைக்கக் கூடாது?


sahayadhas
மார் 15, 2024 11:39

Gst பணம் தேவைக்கு அதிகமாக உள்ளது. போதாகுறைக்கு திருட்டு election bond பணத்தை போட்டு விரைவில் முடிக்க வேண்டுகிறோம்


karupanasamy
மார் 15, 2024 11:26

க்ரித்திகாவின் அடுத்த பட தயாரிப்பாளர் சிட்னி அய்யங்காரா?


venugopal s
மார் 15, 2024 11:08

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போல் சீக்கிரமாக முடித்து விடுங்கள்!


g.s,rajan
மார் 15, 2024 11:05

எதையும் தொலைநோக்குப் பார்வையில் பாருங்கள் ,டாஸ்மாக் பார்வையில் பார்க்கும் போது எல்லாம் உளறுவதுபோல் தான் தெரியும்.....


g.s,rajan
மார் 15, 2024 07:53

இந்தியா பொருளாதாரத்தில் பின்னிப்பெடல் எடுப்பதால் இனி வருங்காலத்தில் பறக்கும் ரயில்களை மட்டுமே விடுவார்கள், அதற்குச் சக்கரங்கள் தேவையா ...???


hari
மார் 15, 2024 08:47

ஓ காலைலயே போயாச்சா ராஜன்


sankaranarayanan
மார் 15, 2024 05:40

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ஆண்டுக்கு, 2.50 லட்சம் 'வந்தே பாரத்' ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று கேட்டவுடனே இங்கிருப்பவர்களுக்கு சக்கரம் போன்று தலையே சுற்றுகிறதாம்


Ramesh Sargam
மார் 15, 2024 06:32

இங்கிருப்பவர்களுக்கு அதைவிட அதிக வருமானம் ஈட்டும் டாஸ்மாக் சரக்கு விற்பனை மற்றும் போதைப்பொருட்கள் கடத்துதல் மற்றும் விநியோகம்தான் ரொம்ப பிடிக்குமாம்


மேலும் செய்திகள்