உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் அதிகாரியை இளம்பெண் பளார் விட்டது ஏன் ?

போலீஸ் அதிகாரியை இளம்பெண் பளார் விட்டது ஏன் ?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரியை பளார் என ஓங்கி அறைந்த பெண்ணை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதன் காரணம் குறித்து இரு தரப்பு தகவல்கள் பரவுகிறது. ஜெய்பூர் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பணியாற்றும் பணிப்பெண் வந்த போது ஒரு நுழைவுவாயில் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இவரிடம் உரிய அடையாள அட்டை இல்லாததால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நேரத்தில் அங்கு பணியில் இருந்த உதவி சப் இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமுற்ற இந்த பெண் போலீஸ் அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். இதில் அவர் நிலைகுலைந்து திடுக்கிட்டு போனார். தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ' பணி முடிந்ததும் எனது வீட்டிற்கு வந்து என்னை சந்திக்குமாறு சப்-இன்ஸ்பெக்டர் கூறினார் என அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உண்மை குறித்து முழுவிவரம் விரைவில் வெளிவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

V Ramasami
ஜூலை 12, 2024 18:50

திரைப்படங்களில் வரும் வன்முறையை வைத்து அதே மாதிரிஅனைத்து செயல்களும் நிறைவேறுகிறது .கட்டாயம் அதை தடை செய்ய வேண்டும்.பிறகு பாருங்கள் எல்லாம் சரியாகிவிடும்.இந்த நிமிடமே தடை செய்தாலும் சீராக பல ஆண்டுகள் ஆகும்.


visu
ஜூலை 12, 2024 17:01

மக்களோடு நேரிடையாக தொடர்பு கொள்ளும் காவலர்கள் பாடி கேமரா மைக் சகிதம் இருப்பது நல்லது இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை


Bala
ஜூலை 12, 2024 13:53

திராவிடியன் மாதிரி, இதுவும்...


Shyam Venkat
ஜூலை 12, 2024 13:05

இந்த 200 ஊப்ஸ்கு இதான் வேல இங்க அவங்க கட்சி மீட்டிங்கள் ஒருத்தன் போலீஸ் இடுப்புல கிலென்னன்னு கம்ப்ளிங்ட் அத எல்லாம் இவருக்கு தெரில


Mohan das GANDHI
ஜூலை 12, 2024 12:51

அந்த விமான கம்பெனி பணிப்பெண், செருடையில் பனி செய்த ஒரு போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அடித்தது மிக மிக குற்றமே இதற்கு கண்டிப்பாக நீதி தண்டனை சட்டத்தில் இடம் உண்டு, ஐந்து விமான கம்பெனி பணிவிடை நீக்கமும் உண்டு எதையுமே வாய்மொழியால் தான் வாதிட வேண்டும் கை, காலால் அல்ல


MADHAVAN
ஜூலை 12, 2024 12:25

பெண்களை அவமானப்படுத்துவது இந்த பிஜேபி ஆட்சில சர்வசாதாரணம், மணிப்பூர் கலவரம், ஹத்ராஸ் கற்பழிப்பு, ரேவண்ண தமிழகத்தில் பொள்ளாட்சில அப்புறம் ஆளுநர் மாளிகைக்கு ஆள் சப்ளை பண்ணுனது,


PRAKASH
ஜூலை 12, 2024 13:05

பி.ஜே.பி ஆட்சிக்கு வரும் வரை பெண்களெல்லாம் மிகவும் பாதுகாப்பாக இருந்தார்களா?


Narayanan
ஜூலை 12, 2024 11:48

பெண்களுக்கான சட்டம் அவர்களை உடனடியாக தனது தவறுகளை மாற்றி பாலியல் கொடுமை என்று இப்படி பேச வைக்கிறது . சட்டமும் நம்புகிறது . கொடுமை


jayvee
ஜூலை 12, 2024 11:33

அடையாள அட்டை இல்லாமல் வந்தார் என்பது நிரூபிக்கப்பட்டால் அந்த சொன்னதும் பொய் என்பது தானாகவே நிரூபணம் ஆகிவிடும்.. பல கடத்தல்களில் விமான பனி ஊழியர்களும் ஏர்போர்ட் ஊழியர்களும் கையாளாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை..


sundarsvpr
ஜூலை 12, 2024 10:38

பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு காவல்துறை அதிகாரி மட்டும் விசாரித்ததாக தெரிவில்லை. செய்தியின் முகப்பின் படத்தில் பல நபர்கள் சுற்றியுள்ளனர். பல நபர்கள் முன்னிலையில் காவல் அதிகாரி வீட்டிற்கு வர அழைத்திட வாய்ப்பு இல்லை. வாசகர்கள் சந்தேகத்திற்கு செய்திகள் இருப்பது சரியில்லை.


swamy
ஜூலை 12, 2024 10:18

செய்தி உண்மை எனில், இன்னொரு முறை கூட அறையலாம் .... weldone


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை