உயிரி தொழில்நுட்ப கருத்தரங்கு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 'கல்வி ஆராய்ச்சியிலிருந்து ஸ்டார்ட்அப் வரை' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.மாணவர்கள் மத்தியில் புதுமை சார்ந்த தொழில் முனைவை ஊக்குவிக்கவும், உயிரித் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் சூழலை உருவாக்கவும், இந்நிகழ்ச்சி நடந்தது. பி.டெக்., உயிரித் தொழில்நுட்பம் பயிலும், 120 இளநிலை மாணவர்கள் பங்கேற்றனர். கோவை நீர்பாசி கார்பன் சொல்யூஷன்ஸ் நிறுவனர் ஜிதேஷ் விஜயன் பேசுகையில், “ஆராய்ச்சி முடிவுகளை வணிகமயமாக்கும் செயல்முறையை பின்பற்றுவது அவசியம்,” என்றார்.