கருத்தரங்கு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலை ஆங்கிலத் துறை சார்பில் நவீன காலத்தில் ஷேக்ஸ்பியரின் பொருத்தம் என்ற தலைப்பில் மாநில கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, நவீன காலத்தில் ஷேக்ஸ்பியரின் பொருத்தம் புத்தகத்தை வெளியிட்டு பேசினார். உதவிப் பேராசிரியர் ஸ்டாலின் வரவேற்றார்.புத்தகத்தை பெற்றுக் கொண்ட சிறப்பு அழைப்பாளர் வின்சென்ட் ராஜசேகர் ஷேக்ஸ்பியர் குறித்து பேசினார். மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஏற்பாடுகளை ஆங்கிலத்துறைத் தலைவர் சத்தியவதி, உதவிப் பேராசிரியர்கள் செய்தனர். உதவிப் பேராசிரியர் சரவணன் நன்றி கூறினார்.