உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காகித விலையை காரணம் காட்டி பாடப்புத்தகங்கள் விலையை உயர்த்தலாமா?

காகித விலையை காரணம் காட்டி பாடப்புத்தகங்கள் விலையை உயர்த்தலாமா?

சென்னை : பள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அதன் விபரம்:

பழனிசாமி:

அரசு பாடத் திட்டத்தில் படிக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விலையை, 40 சதவீதம் உயர்த்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது. இது தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களையும் பாதிக்கும். தற்போது உயர்த்தப்பட்டுள்ள, பள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வை, உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும்.

பன்னீர்செல்வம்:

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப்புத்தகங்கள் விலையை, தி.மு.க., அரசு உயர்த்தி உள்ளது. காகித விலை, அச்சிடும் கட்டணம் உயர்வு என, காரணம் தெரிவித்தாலும், 48 கோடி ரூபாய் செலவழித்து, கார் பந்தயம் நடத்தும் அரசுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அனைவருக்கும் கல்வியை இலவசமாக தர முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் புத்தகங்களையாவது இலவசமாக தர அரசு முயற்சி செய்ய வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால், விலையையாவது ஏற்றாமல் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

'நஷ்டத்தை ஈடுகட்டவே இந்த விலை உயர்வு!'

'பாடப்புத்தகங்களின் விலை உயர்வுக்கு லாப நோக்கம் காரணமல்ல' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு விற்கப்படும் பாடநுால்கள் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை காகிதம், மேல் அட்டை, அச்சுக்கூலி ஆகியவற்றின் உயர்வைக் கருத்தில் கொண்டு விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது.கடந்த 2015ல், 370 சதவீதம், 2018ல் 466 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது. 2018ஐ ஒப்பிடும்போது, காகித விலை 63 சதவீதம், மேல் அட்டை விலை 33 சதவீதம், அச்சுக்கூலி 21 சதவீதம் தற்போது உயர்ந்துள்ளது. அதற்கான செலவை ஈடுகட்டும் வகையில், ஆறாண்டுகளுக்கு பின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகம், மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மாவட்ட நுாலகங்கள், அறிவுசார் மையங்களுக்கு தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAAJ68
ஆக 15, 2024 23:09

கார்பந்தயத்துக்கு 40 கோடிகள் செலவழிக்கிறீர்கள் பாட புத்தகத்தை வெளியேற்றுவது நியாயமா அந்த 40 கோடியை பாடப் புத்தகத்தில் ஈடு செய்ய முடியாதா.


அப்பாவி
ஆக 15, 2024 10:15

ஓசில குடுத்தா படிப்பு வராது. இலவசம்னு எதுவும்.இல்லை. காசு குடுத்து புஸ்தகன் வாங்கிப் படிக்கணும்.


kulandai kannan
ஆக 15, 2024 07:53

அதிகபட்சமாக 12ம் வகுப்புக்கு 1200 ருபாய் உயர்வு. ஒரு நாளைக்கு ரூ. 4க்கும் குறைவே. எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டாம். அந்த அவியல் அரசியல் தீயமுகவோடு முடியட்டும்.


ஆரூர் ரங்
ஆக 15, 2024 11:40

ஒரு நிமிடத்திற்கு இவ்வளவு எனவும் கூறியிருந்தா இன்னும் நல்லாருக்கும்.


RAAJ68
ஆக 15, 2024 07:38

வருடா வருடம் கொள்ளை அடிக்கும் லட்சம் கோடிகள் பணத்தில் ஈடு கட்ட முடியாதா.


கோவிந்தராசு
ஆக 15, 2024 07:18

ஆயிரம் ரூபா குடுக்ககாசு இருக்குது. இதுக்கு.இல்லயா விடீலூ


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ