உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உங்களில் ஒருவன்: பட்டியல் இன சமூகத்தினருக்கு பிரதமர் அளித்த முதல் மரியாதை

உங்களில் ஒருவன்: பட்டியல் இன சமூகத்தினருக்கு பிரதமர் அளித்த முதல் மரியாதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக, குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் குரலெழுப்பத் துவங்கியிருக்கின்றனர். ஏழை எளிய மக்களின் நலனுக்கான பா.ஜ., ஆட்சி தமிழகத்திலும் வர வேண்டும் என்ற விருப்பம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. திருவிடைமருதுார், மயிலாடுதுறை, பூம்புகார் உள்ளிட்ட மூன்று சட்டசபை தொகுதிகளில் நடந்த பாதயாத்திரை பயணத்தின் போது முழுமையாக உணர முடிந்தது.

வரலாற்று சிறப்பு

பதினொரு நாட்கள் விரதம் இருந்து, பிரதமர் மோடி அயோத்தியில் பால ராமரை பிராணப் பிரதிஷ்டை செய்தார். தமிழகத்தின் பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த 35 ராமர் கோவில்கள் உள்ளன. ஆனால், ராமருக்கும், தமிழகத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கின்றனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை, தமிழக மக்கள் காணக் கூடாது என்று, தி.மு.க., அரசு விதித்த தடையை, நீதிமன்றம் சென்று முறியடித்திருக்கிறோம்.

கலக்கம்

ஓட்டு அரசியலுக்காக ஹிந்து மக்களையும், கடவுள்களையும் தவறாகப் பேசி, குளிர்காய்ந்து கொண்டிருந்த தி.மு.க.,வுக்கு, அயோத்தி ராமபெருமான் கோவில் விழா, தமிழகம் முழுதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.ஒவ்வொரு முறை தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிராக செயல்படும் போதெல்லாம், தமிழகத்தில் ஆன்மிக மறுமலர்ச்சி ஏற்படுகிறது. மக்களின் அடிப்படை வழிபாட்டு உரிமைகளை பறித்து, 'நாங்கள் பெருமாளையும் கும்பிடுவோம்; பெரியாரையும் கும்பிடுவோம்' என்கிறார் முதல்வர் ஸ்டாலின். 'ஹிந்துக்கள் விழித்துக் கொண்டால், தி.மு.க., காரன் காவடி துாக்க கூட தயங்க மாட்டான்' என்று அமரர் சோ ராமசாமி கூறியதில் பாதி உண்மையாகி விட்டது.

பெருமை

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், அன்றைய பிரதமர் நேருவுக்கு தமிழக ஆதீனங்களால் வழங்கப்பட்ட செங்கோலை, ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தனர். நம் பிரதமர், அந்த செங்கோலை, புதிய பார்லிமென்டின் மையக் கட்டடத்தில் வைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார்.

பட்டினப் பிரவேசம்

மதிப்புமிக்க தருமபுரம் ஆதீனத்தின் பாரம்பரிய பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை, தி.மு.க., அரசு தடை செய்தபோது, தமிழக பா.ஜ., குரல் கொடுத்தது; பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு ஆதரவாக நின்றது. கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய ரங்கநாத சுவாமி கோவில் மண்டபத்தில், பிரதமர் அமர்ந்து கம்பராமாயணத்தை கேட்டு மகிழ்ந்தார். தமிழுக்கும், தமிழ் கலாசாரத்துக்கும் பிரதமர் மோடி வழங்கும் மதிப்பு அத்தகையது.ஆன்மிக பூமியான தமிழகத்தில், பொது மக்களின் இறை நம்பிக்கையை தரக்குறைவாக விமர்சித்து விட்டு, எளிதில் தப்பித்து விடலாம்; எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் மீது காவல் துறை அடக்குமுறையை ஏவி விடலாம் என்ற எண்ணத்தில், இன்னும் தி.மு.க., அரசு இருந்தால், உடனடியாக அதை மாற்றிக் கொள்வது நல்லது.வேங்கைவயல் சம்பவத்திலோ, தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த பட்டியல் சமூகப் பெண் தாக்கப்பட்டதிலோ, குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை.

எது சமூக நீதி?

சமூக நீதி என்று நாடகமாடும் தி.மு.க., கூட்டணி கட்சிகள், இது குறித்து பேசுவதே இல்லை. தி.மு.க.,வின் ஒரு குடும்பம் அதிகாரத்தில் இருக்க, தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் போடும் வேஷம் தான் சமூக நீதி. உண்மையான சமூக நீதி என்பது, ஜனாதிபதியை தேர்வு செய்ய கிடைத்த இரண்டு வாய்ப்புகளிலும், பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடி சமூகத்தில் இருந்து இரண்டு பேரை தேர்ந்தெடுத்து, நாட்டின் முதல் குடிமகன் என்ற பெருமையை வழங்கியது, பிரதமர் மோடி தான். இதுதான் உண்மையான சமூக நீதி. இப்படிதான் பட்டியல் இன சமூகத்தவர்களுக்கு பிரதமர் மோடி முதல் மரியாதை அளித்துள்ளார்.திருபுவனம் பட்டுச் சேலைகள் ஆண்டுக்கு 465 கோடி ரூபாய் வரை விற்பனையாகின்றன. கடந்த 2019ம் ஆண்டு, திருபுவனம் பட்டுக்கு பிரதமர் மோடி புவிசார் குறியீடு வழங்கி பெருமைப்படுத்தினார். கடந்த 10 ஆண்டுகளில், லட்சக்கணக்கான மக்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பலனடைந்துள்ளனர். அது தொடரவும், இந்தியாவின் நன்மைக்காகவும், பிரதமர் மோடி ஆட்சி மீண்டும் மலர வேண்டும். பயணம் தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

kijan
ஜன 25, 2024 23:40

சார் .... பிரதமரின் இராமேஸ்வரம் கடலில் புனித நீராடல் ..... பல பேர் மனதை கரைத்து விட்டது .... நம் குடும்பத்தில் உள்ள கண்டிப்பான பெரியவர் ஒருவர் ....குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வந்து .... சாமி கும்பிடவைப்பாரே ....அது போல உணருகிறார்கள் ... 11 நாள் விரதமிருந்த ஒருவர் இவ்வளவு தைரியமாக இருந்தது ....அவருக்குள் இருக்கும் கடவுள் உணர்வு தான் ..... போற்றுவார் போற்றட்டும் .... தூற்றுவார் தூற்றட்டும் ....எம் கடன் பணிசெய்து கிடப்பதே ... என்ற உணர்வு எல்லோருக்கும் வராது .... எம்.ஜி.ஆருக்கு அப்புறம் ....இவரைப்பற்றி தான் மக்கள் ...அவருக்கு என்ன புள்ளையா ...குட்டியா ... எல்லாம் நமக்காகத்தானே செய்கிறார் என்று பேசுகிறார்கள் ...


திகழ்ஓவியன்
ஜன 25, 2024 13:02

இந்த நபருக்கு வேலையே, காலையில் எழுந்ததும் எதாவது குறை சொல்லி குழப்பம் செய்வித்து, அதை தலைமை ஆபிசுக்கு சொல்வது மட்டுமே.


ஆரூர் ரங்
ஜன 25, 2024 16:48

பெரிய இடத்து மகன், மருமகனின் வேலை ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடியாவது ஆட்டைய போடுவது.... அதற்காக மாதம் ஒரு பேக்கேஜ் போடுவது.


வெள்ளைச்சாமி,தஞ்சை
ஜன 25, 2024 17:34

உனக்கு அறிவாலயத்துக்கு முட்டுக் கொடுப்பதுதான் முழு நேர வேலையே நீ....


Bala
ஜன 25, 2024 19:22

முட்டுக்கொடுக்கும் விடியல் அடிமைகள் ஏதோ ஒருவகையில் கொள்ளைக்கூட்டத்தினரின் பயனாளிகளோ? இருக்கலாம். பாவம் இவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் வளர்ப்பு அப்படி


அசோகன்
ஜன 25, 2024 12:31

நம் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் அண்ணாமலைக்கு ஓட்டு போடுவோம்...... இல்லை நம் எதிர்காலம் குடிச்சுவராகதான் போகும்


duruvasar
ஜன 25, 2024 12:17

பிராணபிரிதிஷ்டைக்கும் குடமுழுக்க்கும் வித்தியாசம் அறியாத அறிவீலிகள்


Sampath Kumar
ஜன 25, 2024 11:37

எல்லாம் வோட்டுக்கு போடும் வேஷம் தான் வோட்டு தான் கிடைக்காது


அப்புசாமி
ஜன 25, 2024 07:14

ஏன் ஜனாதிபதியோட நின்னுட்டீங்க? அவர்களில் ஒருவரையே பிரதமராக்கி கௌரவிக்க வேண்டியதுதானே? பத்து வருஷம் இருந்தாச்சில்லே?


ஆரூர் ரங்
ஜன 25, 2024 10:35

60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரசு ஜெகஜீவன்ராமை பிரதமாராக்க எதிர்ப்பு தெரிவித்தனர்????. திரு ராம்நாத் கோவிந்த் மற்றும் , திருமதி முர்மு ஜனாதிபதிகளாவதையும் விரும்பவில்லை.


Sakthi,sivagangai
ஜன 25, 2024 11:46

ஏலே அப்புசாமி இதே கேள்வியை திமுக தலைமையை பார்த்து கேட்க வேண்டியதானே பெரிய அறிவாளி....நெனப்பு


NicoleThomson
ஜன 25, 2024 22:10

சரி சரி இளைஞர் எழுச்சி மாநாட்டில் பிரியாணி அண்டாவை தூக்கிட்டு போனவனை கண்டுபிடுச்சிட்டு வந்து எழுதுங்க பிரதர்


Kasimani Baskaran
ஜன 25, 2024 06:11

சமூக நீதி என்பது த்திராவிட சமூக முறைப்படி நீதி என்பதை தவறாக அண்ணாமலை புரிந்து கொண்டுள்ளார். அதன்படி த்திராவிடர்கள் தவறு செய்தால் அது தவறாக எடுத்துக்கொள்ளப்படாது.


NicoleThomson
ஜன 25, 2024 05:57

ஒப்புக்கொள்கிறேன் திரு அண்ணாமலை அவர்களே , என்னோட பொண்டாட்டி கிருஸ்துவச்சி , அதனால் நான் கிருஸ்துவன் என்று மண்டியிட்ட அமைச்சர் , ஹிந்துக்கள் கோவிலுக்கு செல்ல மாட்டார் சென்றாலும் அங்கு கொடுக்கும் விபூதியை அழிப்பார் ஆனாலும் இந்து வாக்காளர்களுக்கு சொரணை வராது . அது தான் திராவிட மாடல்


மேலும் செய்திகள்