உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவிக்கு கத்தி குத்து கணவர் மீது வழக்கு

மனைவிக்கு கத்தி குத்து கணவர் மீது வழக்கு

புதுச்சேரி: முத்தரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி, 32: மீன் வியாபாரி. இவரது மனைவி மகாலட்சுமி, 27; இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகாலட்சுமி அதே பகுதியில் தர்பூசணி வியாபாரம் செய்து வருகிறார். தர்பூசணி வியாபாரம் செய்யும் போது, பலரிடம் மனைவி பேசுவதால் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால், கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி நேற்று வீட்டில் படுத்திருந்த மனைவின் காலில் கத்தியால் வெட்டினார். அதில், பலத்த காயமடைந்த, அவர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, பெரியசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை