உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனுமதியின்றி மின்வேலி மரக்காணம் அருகே 3 பேர் கைது

அனுமதியின்றி மின்வேலி மரக்காணம் அருகே 3 பேர் கைது

மரக்காணம் : மின்சாரம் தாக்கி விவசாயி இறந்த வழக்கில், அனுமதியின்றி மின்வேலி அமைத்த மூவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன்,56; விவசாயி. இவர், நேற்று முன்தினம் தனது நிலத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றபோது, மின் வேலியில் சிக்கி இறந்தார்.பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கள்ளத்தனமாக மின்வேலி அமைத்தது சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் அய்யனார்,34; திடீர் நகர் எட்டியப்பன் மகன் ராஜகுமாரன்,25; நடுத்தெரு கிருபாகரன் மகன் கோதண்டராமன், 38; என்பது தெரியவந்தது. அதன்பேரில் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்