மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
4 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
4 hour(s) ago
மரக்காணம் : மின்சாரம் தாக்கி விவசாயி இறந்த வழக்கில், அனுமதியின்றி மின்வேலி அமைத்த மூவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன்,56; விவசாயி. இவர், நேற்று முன்தினம் தனது நிலத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றபோது, மின் வேலியில் சிக்கி இறந்தார்.பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கள்ளத்தனமாக மின்வேலி அமைத்தது சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் அய்யனார்,34; திடீர் நகர் எட்டியப்பன் மகன் ராஜகுமாரன்,25; நடுத்தெரு கிருபாகரன் மகன் கோதண்டராமன், 38; என்பது தெரியவந்தது. அதன்பேரில் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago