உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது

பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் ஓடவெளி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 3 வாலிபர்கள் ரகளை செய்வதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.அங்கு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள், அரியாங்குப்பம், ஓடவெளியை சேர்ந்த, வீரமுத்து, 20; பிரகாஷ், 21; கிருஷ்ணன், 20; என, தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி