உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெயிண்டர் மீது தாக்குதல் 4 பேருக்கு வலை

பெயிண்டர் மீது தாக்குதல் 4 பேருக்கு வலை

புதுச்சேரி: இறுதி சடங்கில் பங்கேற்ற பெயிண்டரை தாக்கிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.முதலியார்பேட்டை அடுத்த உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் தவசி,24; பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், முத்தியால்பேட்டை பகுதியில் நடந்த இறுதி சடங்கில், தவசி இவரது நண்பர் தினேஷ் ஆகிய இருவரும் நடந்து சென்றனர். அப்போது, பூமியான்பேட்டை சேர்ந்த விக்கி என்பவர் புகை பிடித்தது தொடர்பாக, தவசி அவரது நண்பரிடம் தகராறு செய்து தாக்கினார். இதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்த, புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விக்கி உட்பட 4 பேரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை