உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் விழிப்புணர்வு

அரசு பள்ளியில் விழிப்புணர்வு

புதுச்சேரி: புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி சிறகம் சார்பில், தமிழ் மொழி வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தொண்டமநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பொறுப்பாசிரியர் மனோன்மணியம் தலைமை தாங்கினார். ஆசிரியர் கலைவாணி வரவேற்றார். தமிழ் வளர்ச்சி சிறக அலுவலர் வாசுகி வாழ்த்தி பேசினார்.மாணவர்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 குழுக்களாக பிரித்து பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, தமிழ் வளர்ச்சி குறித்த புத்தகங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை