உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த நினைவு தினம்

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த நினைவு தினம்

காரைக்கால்: காரைக்காலில் இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த தினத்தை முன்னிட்டு பிரெஞ்சு நினைவு சின்னத்துக்கு கலெக்டர் மணிகண்டன் மரியாதை செலுத்தினர். காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பிரெஞ்சு நினைவு சின்னத்தில் 79வது இரண்டாவது உலக யுத்தம் முடிவடைந்து நாளை முன்னிட்டு கலெக்டர் மணிகண்டன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். பின்னர் பிரெஞ்சு முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து இந்தியா, பிரெஞ்சு ஆகிய இருநாட்டு தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு,தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டும் மரியாதை செலுத்தப்பட்டது.மேலும் ஒரு நிமிடம் இறந்த போர் வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை