உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி பிரிந்ததால் கணவன் தீக்குளிப்பு

மனைவி பிரிந்ததால் கணவன் தீக்குளிப்பு

காரைக்கால் : மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.காரைக்கால் நிரவி ஊழியபத்து பகுதியை சேர்ந்த கார்த்திகேசன், 35; கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதிகா இவர்களுக்கு இருபிள்ளைகள் உள்ளனர். கார்த்திகேசன் குடிப்பழக்கத்தை நிறுத்ததால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி ராதிகா தனது பிள்ளைகளுடன் அவரது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வருகின்றார்.இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகேசன் கடந்த 16ம் தேதி அப்பகுதியில் உள்ள இடுகாடு பகுதியில் உடலில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருந்துவனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி கார்த்திகேசன் நேற்று முன்தினம் இறந்தார்.இது குறித்து நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை