உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்

 பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்

வில்லியனுார்: வில்லியனுாரில் உள்ள பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில் திறப்பு திருமஞ்சனம், மாலை 7:00 மணியளவில் தீபாராதனை, அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 9:00 மணியளவில் கைசிக புராணம் வாசித்தல் நிகழ்ச்சி, தொ டர்ந்து சாந்தாலட்சுமியின்உபன்யாசம், காலை 11:00 மணியளவில் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் வில்லியனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் தரி சனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சந்தானராமன் மற்றும் உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை