உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆதிங்கப்பட்டு அரசு பள்ளியில் நவீன வகுப்பறை திறப்பு விழா

 ஆதிங்கப்பட்டு அரசு பள்ளியில் நவீன வகுப்பறை திறப்பு விழா

பாகூர்: ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், புதிதாக கட்டப்பட்ட நவீன வகுப்பறைகள் திறப்பு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் நான்சி ஏஞ்சலின் வரவேற்றார். முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு புதிய வகுப்பறைகளை திறந்து வைத்து, வாழ்த்தி பேசினார். விழாவில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை