உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம்

பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம்

நெட்டப்பாக்கம், : சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் நாளை நடக்கிறது.நெட்டப் பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற பழமை வாய்ந்தகனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை புனர்பூசம் நட்சத்திரம் முன்னிட்டு காலை 8.00 மணிக்கு கோதண்டராமருக்குபிரபந்த சேவை உற்சவம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மதியம் 1.00 மணிக்கு தீபாரதனை நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி