உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த பெருமாள்சேரி, புதுச்சேரி சாலை கால்வாய் பாலத்தின்கீழ், நேற்று மாலை 4:30 மணிக்கு, ஆண் உடல் கிடப்பதாக, சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தெரிய வந்தது.அந்த உடலை மீட்ட போலீசார், பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த நபர், 35 - 40 வயது மதிக்கத்தக்கவர், அவர், யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அதுகுறித்து விசாரித்து வருகிறோம் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ