உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தலை முடி வியாபாரிகளிடம் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

தலை முடி வியாபாரிகளிடம் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

சென்னை:மாதவரம் தொகுதி தேர்தல் கண்காணிப்பு படையினர், நேற்று அதிகாலை புழல் மத்திய சிறைச்சாலை - தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட, 'இனோவா' காரை நிறுத்தி விசாரித்தனர்.அதில் பயணித்தவர்கள், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராஜு ஜெகன்னாதன், தாசரி வெங்கடேஸ்வரா ராவ், ராமகோட்டால ஜெகன்னாதன் என்பதும்,ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் தலை முடிகளை சேகரித்து,சென்னையில் உள்ள, 'விக்' தயாரிக்கும்நிறுவனங்களுக்கு விற்கும் தொழில் செய்து வருவதும் தெரிவந்தது.அவர்களிடம், உரிய ஆவணமின்றி இருந்த, 4.50 லட்சம் ரூபாயை, கண்காணிப்பு படையினர் பறிமுதல் செய்து, மாதவரம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.தலைமுடி விற்ற பணத்தை பறிகொடுத்த,ஆந்திர மாநில வியாபாரிகள் பரிதாபமாக சென்றனர்.* சென்னை, திருவல்லிக்கேணி, பெசன்ட் சாலையில் நேற்று மாலை தேர்தல் பறக்கும்படை அதிகாரி வெங்கடேச சிவநாதன் தலைமையில் வாகன சோதனைநடத்தினர்.அப்போது, திருவல்லிக்கேணி,குப்பு முத்து தெருவைச் சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்த அதிகாரி லட்சுமி கீர்த்திகா,30, என்பவர் காரில் வந்தார்.அப்போது, பறக்கும் படையினர் ,அவரது காரை சோதனையிட்டபோது, உரிய உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 1.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை