மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
4 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
4 hour(s) ago
மறைமலை நகர் : தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் சந்தோஷ், 25. இவர், நேற்று மதியம், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தனது ஹீரோ ஸ்பிளென்டர்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.சிங்கபெருமாள் கோவில் பகுதியில், ஒரகடம் சாலை சந்திப்பை கடந்த போது, ரெட்டிப்பாளையம் செங்கல் சூளையில் இருந்து, செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி சந்தோஷ் வாகனத்தில் மோதியது.இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சந்தோஷ்க்கு, கால்களில் முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், சந்தோஷை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago