உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புறநகரில் போக்குவரத்து நெரிசல்

புறநகரில் போக்குவரத்து நெரிசல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி, மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில், தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தங்கி உள்ளனர்.இவர்கள் வார விடுமுறையை முன்னிட்டு, கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில், சொந்த ஊர்களுக்கு பேருந்துகள், கார், இருசக்கர வாகனங்களில் சென்றனர்.நேற்று விடுமுறை முடிந்ததையடுத்து, மாலை மீண்டும் சென்னை நோக்கி படையெடுத்தனர். அதிக அளவில் வாகனங்கள் வந்த வண்ணம் இருந்ததால், பரனுார் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.மேலும், சுங்கச்சாவடியின் இருபுறமும், புதிய சாலை அமைக்க, பழைய சாலை பெயர்த்து அகற்றப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்கினர்.இதன் காரணமாக, 1 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க, சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டு, வாகனங்கள் அதன் வழியாக அனுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ