மேலும் செய்திகள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 232 பேர் ஆப்சென்ட்
1 hour(s) ago
மேல்மருவத்துாரில் பைக் திருடிய நபருக்கு காப்பு
1 hour(s) ago
அரசு பள்ளிக்கு இரும்பு கேட் அமைக்க பெற்றோர் கோரிக்கை
1 hour(s) ago
மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு பகுதியில், பாலுார் போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். அதனால், இருவரையும் போலீசார் சோதனை செய்தபோது, அவர்கள், 1.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணை செய்தனர்.அதில், இருவரும் தெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த மாதவன், 23, சென்னை, எண்ணுார் பகுதியைச் சேர்ந்த பிரான் வினோத், 28, என்பதும் தெரிந்தது.அவர்கள் இருவரும், தெள்ளிமேடு, கொளத்துார், வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சீமைகருவேலமர புதர்களில் பதுங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago