| ADDED : நவ 21, 2025 03:08 AM
சிங்கபெருமாள் கோவில்:தென்மேல்பாக்கத்தில், தாம்பரம் மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்கள், தீயிலிட்டு அழிக்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கத்தில், 'ஜி.ஜே., மல்டிகிலேவ்' என்ற தனியார் மருத்துவ கழிவுகள் எரிக்கும் நிறுவனத்தில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை எரிப்பது வழங்கும். இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 707 கிலோ கஞ்சா, நேற்று தீயிட்டு அழிக்கப்பட்டது. இந்தாண்டில் இதுவரை, 3,054 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.