| ADDED : டிச 12, 2025 06:03 AM
திருக்கழுக்குன்றம்: கழனிப்பாக்கத்தில், பொதுமக்களை அச்சுறுத்திய குளவிகளை, தீயணைப்புத் துறையினர் அழித்தனர். மானாமதி அடுத்த, திருநிலை ஊராட்சிக்கு உட்பட்டது கழனிப்பாக்கம். இப்பகுதி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் உள்ள பனை மரத்தில், விஷ குளவிகள் கூடு கட்டியிருந்தன. அவை சாலை பகுதியில் தொடர்ந்து சத்தமிட்டு பறந்த நிலையில், அப்பகுதியினர் அச்சப்பட்டனர். குளவிக் கூட்டை அழிக்க வலியுறுத்தினர். இதையடுத்து, பையனுார் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சங்கிலிபூதத்தான் மேற்பார்வையில், திருக்கழுக்குன்றம் தீயணைப்பு வீரர்கள், நேற்று முன்தினம் இரவு கூடு மற்றும் குளவிகளை அழித்தனர்.