உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காதலியுடன் தகராறு போலீஸ்காரர் தற்கொலை

காதலியுடன் தகராறு போலீஸ்காரர் தற்கொலை

ஆவடி:கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 27. இவர், ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் தங்கி, மணலி உதவி கமிஷனர் அலுவலகத்தில், கணினி ஆப்பரேட்டராக பணி புரிந்து வந்தார்.இவரும், அதே காவலர் குடியிருப்பில் உள்ள 25 வயது பெண் போலீசும் காதலித்துள்ளனர். இரு வீட்டார் சம்மதத்துடன், மே மாதம் திருமணம் நடக்க இருந்தது.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த விக்னேஷுக்கும், அவரது காதலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் கோபித்துக் கொண்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ், அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


 பட்டம்

19 hour(s) ago  




அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை