உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமடைந்த மின்மாற்றியை சீரமைக்க வேண்டுகோள்

சேதமடைந்த மின்மாற்றியை சீரமைக்க வேண்டுகோள்

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பெருக்கரணை கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.பெருக்கரணை கிராமத்தில், கயப்பாக்கம் - அச்சிறுபாக்கம் சாலை சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே, மின் மாற்றி அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள 150 குடும்பத்தினருக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது.மின் மாற்றியை தாங்கிப் பிடிக்கும் கம்பங்கள், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு முற்றிலும் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.பேருந்து நிறுத்தம் அருகே விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ள மின் கம்பங்களை, துறை சார்ந்த அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ