உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டூ - வீலர் திருடிய 3 பேர் பிடிபட்டனர்

டூ - வீலர் திருடிய 3 பேர் பிடிபட்டனர்

குரோம்பேட்டை, குரோம்பேட்டை, சோழவரம் நகரை சேர்ந்தவர் மாதேஷ், 24. இவரது வீட்டு வாசலில் நிறுத்திய டூ - வீலர் மே 6ம் தேதி திருடு போனது. அவர், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மூன்று பேர், வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. அதேபோல், துர்கா நகரைச் சேர்ந்த சுரேஷ், 47, மரியதாஸ், 26, ஆகியோரின் இருசக்கர வாகனங்களும் திருடப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, நங்கநல்லுாரை சேர்ந்த மணிகண்டன், கீழ்கட்டளையை சேர்ந்த விவேக் மற்றும் மெக்கானிக் மணிகண்டன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை