உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வங்கியில் தீ ஏசி நாசம்

வங்கியில் தீ ஏசி நாசம்

நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. நேற்று காலை, 8:30 மணிக்கு, வங்கியில் மின் கசிவால் தீப்பற்றியது.தேனாம்பேட்டை, தி.நகர், அசோக் பில்லர் தீயணைப்பு வீரர்கள் வந்து, அரை மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.பால்சீலிங், 'ஏசி' மற்றும் இணைய கேபிள், தீயில் எரிந்து நாசமாகின. வங்கி சேவைகளுக்காக வந்த வாடிக்கையாளர்கள், மிகவும் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ