உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இணைப்பு பாலத்தில் அத்துமீறி தனியார் வாகனங்கள் பார்க்கிங்

இணைப்பு பாலத்தில் அத்துமீறி தனியார் வாகனங்கள் பார்க்கிங்

சூளைமேடு:இணைப்பு பாலத்தின் மேல், இருபுறத்திலும் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களால், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.சூளைமேடு சிக்னலில்இருந்து, ஹாரிங்டன் சாலையை நோக்கிச் செல்லும் வழியில், சூளைமேடு நமச்சிவாயபுரத்தில், இணைப்பு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறங்களும், அப்பகுதிகளில் வசிப்போர் ஆட்டோ மற்றும் கனரக வாகனங்களை, 'பார்க்கிங்' போல் அத்துமீறி நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இணைப்பு பாலத்தில் பல ஆண்டுகளாகவே, அத்துமீறி வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். சூளைமேடு சிக்னல் அருகில் உள்ள போலீசாரும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர்.சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள், பாலத்தில் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி