உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எத்திராஜ் கல்லுாரி சாம்பியன் டி - 20 குருநானக் ஏமாற்றம்

எத்திராஜ் கல்லுாரி சாம்பியன் டி - 20 குருநானக் ஏமாற்றம்

சென்னை,வேளச்சேரி, குருநானக் கல்லுாரி சார்பில், 10ம் ஆண்டு பவித் சிங் நாயர் நினைவு கோப்பைக்கான, அகில இந்திய 'டி - 20' கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் மாணவர்களில் 16, மாணவியரில் 10 அணிகள் என, மொத்தம் 26 அணிகள் பங்கேற்றன.வேளச்சேரி கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்த மாணவியருக்கான இறுதிப் போட்டியில், எத்திராஜ் கல்லுாரி மற்றும் குருநானக் கல்லுாரி 'ஏ' அணிகள் மோதின.இதில், 'டாஸ்' வென்ற எத்திராஜ் கல்லுாரி அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட் செய்த, குருநானக் 'ஏ' அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை அடித்தது.அடுத்து களமிறங்கிய, எத்திராஜ் அணி, 15.3 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து, 140 ரன்கள் எடுத்தது. இதனால், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில், எத்திராஜ் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது. எத்திராஜ் அணி வீராங்கனை சுஷாந்திகா, 45 பந்துகளில் 14 பவுண்டரியுடன், ஆட்டமிழக்காமல் 72 ரன்களை குவித்தார். மற்றொரு வீராங்கனை சுபஹாரணி, 41 பந்துகளில் ஒன்பது பவுண்டரியுடன் 56 ரன்களை அடித்து, வெற்றிக்கு கைக்கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை