உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூகுள் மேப் பயணத்தால் சுரங்கப்பாதையில் சிக்கிய லாரி

கூகுள் மேப் பயணத்தால் சுரங்கப்பாதையில் சிக்கிய லாரி

எண்ணுார், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் அருண்குமார், 32; லாரி ஓட்டுனர். நேற்று, காஞ்சிபுரத்தில் இருந்து அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு, மீஞ்சூர் வழியாக மணலி சென்றார். இந்த நிலையில், 'கூகுள் மேப்' காட்டிய பாதையால், மணலி செல்ல வேண்டிய லாரி, எண்ணுார், காமராஜர் நகர் - ரயில்வே சுரங்கபாதைக்குள் சென்ற போது சிக்கி கொண்டது.இதனால், எண்ணுாரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்த, எண்ணுார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொக்லைன் உதவியுடன் லாரியை மீட்டு வெளியேற்றினர்.இதன் காரணமாக, எண்ணுார் - கத்திவாக்கம் நெடுஞ்சாலை, எண்ணுார் விரைவு சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ