உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துணை மின் நிலையத்தில் திடீர் தீ 8 மணி நேரம் போராடி அணைப்பு

துணை மின் நிலையத்தில் திடீர் தீ 8 மணி நேரம் போராடி அணைப்பு

ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த வாணியஞ்சத்திரம் கிராமத்தில் உள்ளது துணை மின் நிலையம்.இங்கிருந்து மணலி, திருவேற்காடு, கோயம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று காலை, 7:00 மணிக்கு துணை மின் நிலையத்தில்உள்ள ஒரு மின்மாற்றி திடீரென தீப்பற்றி எரிந்தது.தகவலறிந்த செங்குன்றம், மாதவரம், மணலி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.காலை 8:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், துணை மின் நிலையத்தில் இருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.இந்த தீயில் லட்சக்கணக்கான ரூபாய் மின்மாற்றி, மின்கம்பிகள் எரிந்து நாசமாயின. உயிர் சேதம் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை