உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீஸ்காரர் உடலுக்கு அஞ்சலி

போலீஸ்காரர் உடலுக்கு அஞ்சலி

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் முத்துகுமரன், 45; ஸ்ரீபெரும்புதுாரில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ்காந்தி நினைவிட சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து வந்த லாரி, அந்த சந்திப்பில் 'யு -டர்ன்' எடுத்தது. இதனால், காவலர் முத்துகுமரன் எதிர் திசையில் வந்த வாகனங்களை நிறுத்தும் பணியில் ஈடுபட்டார்.அப்போது, சென்னை மார்க்கமாக இருந்து வேகமாக வந்த லோடு வேன், முத்துகுமார் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் இருந்த காவலர் முத்துகுமரன் உடலுக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அஞ்சலி செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ