| ADDED : நவ 20, 2025 03:15 AM
சோமங்கலம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த நல்லுாரைச் சேர்ந்தவர் நவமணி, 31; ரவுடி. இவர் மீது, இரு கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன. இவர், பக்கத்து வீட்டில் உள்ள 15 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து குடு ம்பம் நடத்தி வந்ததை அறிந்து, சோமங்கலம் போலீசார், ஐந்து மாதங்களுக்கு முன் நவமணியை, 'போக்சோ'வில் கைது செய்தனர். சிறையில் இருந்து ஒரு மாதத்திற்கு முன் ஜாமினில் வெளியே வந்த நவமணி, அதே சிறுமியிடம் மீண்டும் பழகியுள்ளார். சிறுமியை, அவரது பெற்றோர் கண்டித்துள் ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி, ரவுடி நவமணி வீட்டில், நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.