| ADDED : டிச 27, 2025 05:14 AM
சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், நாளை எட்டு மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மீஞ்சூர் - அத்திப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே நாளை, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், சில ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 9:00 மணி, கடற்கரை - கும்மிடிப்பூண்டி காலை 9:40 மணி, கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 9:55 மணி, காலை 11:25 மணி, கும்மிடிப்பூண்டி - கடற்கரை காலை 10:55 மணிக்கும் இயக்கப்படும் ரயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்படுகிறது. ஒரு பகுதி ரத்து சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 10:00 மணி ரயில் பொன்னேரி வரை இயக்கப்படும். சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 10:30, 11:15 மணி ரயில்கள், எண்ணுார் வரை இயக்கப்படும். சிறப்பு ரயில்கள் எண்ணுார் - சென்ட்ரலுக்கு காலை 10:36, பகல் 12:08 மணிக்கு, நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. திருவனந்தபுரம் ரயில் சென்னை - கேரளா மாநிலம் திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், மொரப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்தனர். இதையடு த்து, சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் மொரப்பூரில் நின்று செல்ல வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, வரும் ஜன., 1 முதல் இந்த ரயில் இருமார்க்கத்திலும், தலா ஒரு நிமி டம் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.