| ADDED : பிப் 08, 2024 12:52 AM
கண்டனம்ஆட்சிக்கு வந்தது முதலே, எந்த ஒரு புதிய பேருந்துகளையும் வாங்காமல், தரமற்ற, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பேருந்துகளுக்கு 'பிங்க்' நிறம் அடித்து, 'மகளிர் இலவச பஸ்' என்ற பெயரில் இயக்குகின்றனர். பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தான நிலையை உருவாக்கியிருக்கிறது தி.மு.க., அரசு.இனி பேருந்து இலவசம் என்பதை தாண்டி, மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை. இவர்கள் ஆட்சியில், உயிர் பிழைத்து வாழ்வதே சாதனை என்ற நிலையிலே தான் மக்கள் உள்ளனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.-பழனிசாமி, அ.தி.மு.க., பொது செயலர்