உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை பார்வையிட்ட தலைமை செயலர்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை பார்வையிட்ட தலைமை செயலர்

கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, அரசு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பேருந்துகள் இயக்கம், குறைபாடு குறித்து பயணியரிடம் கேட்டறிந்தார்.என்னென்ன என, அதிகாரிகளபேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் இருந்த பயணியர் உதவி மையம், டிக்கெட் முன்பதிவு அலுவலகம், குடிநீர் வசதிகள், பெண்கள் பாலுாட்டும் அறை, கழிப்பறை போன்றவற்றை ஆய்வு செய்தார்.அப்போது, அங்கு பயணியருக்கு வைக்கப்பட்டிருந்த குடிநீரை டம்ளரில் பிடித்து குடித்தார். பின், அதன் தரத்தை பரிசோதனை செய்தார்.தொடர்ந்து, பயணியருக்கு தேவைப்படும் வசதிகளை செய்வதாகவும், குறைகளை நிவர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை