உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தீயணைப்பு துறை மண்டல போட்டி: மத்திய சென்னை அணி சாம்பியன்

 தீயணைப்பு துறை மண்டல போட்டி: மத்திய சென்னை அணி சாம்பியன்

சென்னை: தீயணைப்பு துறையின் மண்டல அளவிலான போட்டிகளில், மத்திய சென்னை அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், வட மண்டல பணியாளர்களுக்கான மண்டல விளையாட்டு போட்டிகள், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி மைதானத்தில் இரண்டு நாட்கள் நடந்தன. இதில், தீயணைப்பு துறை சார்ந்த திறனறி போட்டிகளான, அணி பயிற்சி, ஏணி பயிற்சி, மேலங்கி ஏறுதல், தந்திர கதம்ப உள்ளிட்ட துறைரீதியான போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டம், 'ரிலே' ஓட்டம் போன்ற தடகள போட்டிகளும், வாலிபால், கூடைப்பந்து, பேட்மின்டன் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டியில், தீயணைப்பு துறையின் வட மண்டலத்திற்கு உட்பட்ட, தென்-சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, சென்னை புறநகர் மாவட்ட தீயணைப்பு வீரர்கள், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். அனைத்து போட்டிகள் முடிவில், ஒட்டுமொத்தமாக மத்திய சென்னை மாவட்ட அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதைத்தொடர்ந்து, வடசென்னை இரண்டாமிடத்தையும், தென் சென்னை மூன்றாம் இடத்தையும், புறநகர் மாவட்டம் நான்காம் இடத்தையும் கைப்பற்றி அசத்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை