உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவீஸ்வரர் கோவிலில் ஜூலையில் குடமுழுக்கு

ரவீஸ்வரர் கோவிலில் ஜூலையில் குடமுழுக்கு

வியாசர்பாடி:வியாசர்பாடியில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மழை வெள்ள பாதிப்பிற்கு உள்ளாவதால், தரை மட்டத்தில் இருந்து, 4 அடிக்கு உயர்த்தும் பணிகள், தற்போது நடந்து வருகின்றன.அதேநேரம், மூலவர், அம்மன் மகா மண்டபம், நந்தி கொடிமரம், சண்டிகேஸ்வரர் ராஜகோபுரம் உள்ளிட்டவற்றை 8.60 அடி உயரம் உயர்த்த, 2 கோடி ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்பமான 'ஜாக்கி' உதவியுடன் கோவிலை உயர்த்தும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.அனைத்து பணிகளும், ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெரிகிறது. ஜூலை மாதத்தில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை