உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  காஷ்மீர் பற்றி சிறப்பு சொற்பொழிவு

 காஷ்மீர் பற்றி சிறப்பு சொற்பொழிவு

சென்னை: காஷ்மீரின் கலாசார, பாரம்பரிய பெருமைகளை விளக்கும், 104வது விழிப்புணர்வு நிகழ்ச்சி யில், வரும் சனிக்கிழமை இரவு, 'பஹல்காம் நிகழ்வுக்கு பின் காஷ்மீர்' என்ற தலைப்பில், சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. என்.டி., 'டிவி'யின் மூத்த நிர்வாக இயக்குநர் ஆதித்ய ராஜ் கவுல் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார். காஞ்சி சங்கர மடத்தின் சார்பில், அவ்வப்போது நடத்தப்படும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு டியூப்' சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. நேரலையில் பார்க்க முடியாதவர்கள், காமகோடி 'டிவி, பேஸ்புக், யு டியூப், எக்ஸ்' தளத்தின் வாயிலாக பார்க்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ